பசவேஸ்வரா - மாரம்மா கோவிலில் கொள்ளை
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகா, பரகி கிராமத்தில் பசவேஸ்வரா - மாரம்மா கோவில் உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் தான், இக்கோவிலில் திருவிழா நடந்து முடிந்தது. திருவிழா என்பதால், சுவாமி விக்ரகங்களுக்கு தங்க நகைகள் அணிவித்திருந்தனர்.
நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்த மர்மகும்பல், பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது. நான்கு கிலோ வெள்ளி பொருட்கள், 30 கிராம் தங்கநகைகளை திருடிக்கொண்டு தப்பியோடியது. கொள்ளையடிப்பதற்கு முன், கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்களை திருடிச் சென்றுள்ளனர்.
காலையில் அர்ச்சகர் கோவிலுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பது தெரிந்து, போலீசாரிடம் புகார் அளித்தனர்.
போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டனர்.
சில நாட்களுக்கு முன்னர் தான், குண்டுலுபேட் தாலுகாவின், ஆறு கோவில்களில் திருட்டு நடந்தது.
இப்போது, பசவேஸ்வரா - மாரம்மா கோவிலில் திருட்டு நடந்திருப்பதால், கிராமத்தினர் வருத்தம் அடைந்துள்ளனர். கொள்ளையர்களை கண்டுபிடிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
கோவையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி கைது
-
விஜய் கட்சியுடன் தன்னை ஒப்பிடக்கூடாது என்கிறார் சீமான்
-
தனியார் ரயில்வே தடங்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; அண்ணாமலை வலியுறுத்தல்
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து; 2 குழந்தைகள் பலி
-
டில்லியில் விசாரணை; நடிகர் விஜய்யிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி