தேர்தல் வரும் முன்னரே... பூசல் வந்தது

நாகர்கோவில் : குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்களுக்கு எம்எல்ஏ வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய எம்எல்ஏ., தாரகை கத்பட் தொகுதியிலுள்ள மக்களுக்கோ, கட்சி நிர்வாகிகளுக்கோ எந்தவித நன்மையும் செய்யாமல் வெற்று விளம்பரத்தை செய்து வருகிறார். எனவே இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் தொகுதியில் உள்ள நபர்களுக்கு வாய்ப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக காங்கிரஸ் சேவாதளம் மாநில செயலாளர் தேவசகாயம் சார்பில் விளவங்கோடு பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement