மருத்துவ மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் கைது
ஊட்டி: ஊட்டியில், வட மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய ,அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு, வட மாநிலத்தை சேர்ந்த, 22 வயது மாணவி மருத்துவம் படிக்கிறார். அவரிடம், தேர்வில் வெற்றி பெற உதவுவதாக கூறி, கல்லுாரியில் பணியாற்றும் டாக்டர் ஓம்பிரகாஷ், 44, தனியார் ஓட்டலுக்கு மாணவியை அழைத்து வந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
மாணவி கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் கேட்டதும் ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஊட்டி நகர போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில், டாக்டர், மாணவியை துன்புறுத்தியது தெரியவந்தது.
ஊட்டி மகளிர் போலீசார், நடத்திய விசாரணையில், 'டாக்டர் சென்னையை சேர்ந்தவர். அவருக்கு இரு திருமணங்கள் நடந்த நிலையில், ஊட்டியில் தனியாக வசிக்கிறார்' என, தெரிய வந்தது.
இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, டாக்டர் ஓம் பிரகாஷை கைது செய்து, மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
சில தெலுகு உயர் ஜாதியினர் வெள்ளையா இருந்தா நல்லவன் கருப்ப இருந்தா கெட்டவன் என்பது போன்ற அறிவுபூர்வமற்ற எண்ணம் உள்ளவர்கள் , black lives matter போன்ற விஞ்ஞான ரீதியான விவாதங்கள் படிக்க வேண்டும்
இவனை தூக்கில் போடுங்கள், அரசு பதவியில் ஆட்டம் போடும் இவனைப்போல இன்னும் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள், நீதி துறையும், காவல் துறையும் மிக மிக கடுமையாக நடந்து இவனைப்போன்ற அயோக்கியர்களை மோசமாக நடத்தி அவன் வாழ்க்கையில் மார்க்க முடியாதபடி ற்றேஅத்மேன்ட் செய்ய வேண்டும், சட்டம் ஒழுங்கை காக்க கடுமைதான் சரியான ஆயுதம், அவனிடமே காசு வாங்கிக்கொண்டு, ஸலாம் போடும் புல்லுருவிகளை அடையாளம் கண்டு சரியான தண்டனை கொடுக்குமா நீதித்துறை ?
உங்களுக்கெல்லாம் எதற்கெடுத்தாலும் modula திட்டுலேனா பொழுது போகாதா..
திராவிட மாடல் டாக்டர் அதுதான் இப்படி
நேற்று பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை. தொல்லை கொடுத்தவர் அதே போலீஸ் துறையின் பெரிய அதிகாரி. இன்று மருத்துவ மாணவிக்கு பாலில் தொல்லை. தொல்லை கொடுத்தவர் மருத்துவ கல்லூரி டாக்டர். இதையெல்லாம் அப்படியே முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மறைத்து, தமிழகத்தில்தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு என்று மக்களை ஏமாற்றி திரிகிறார் மாநில முதல்வர் ஸ்டாலின்.
பேரை பாருங்க. ஓம் பிரகாஷ். செருப்பால அடிக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் பேரை கெடுக்கவே இந்த இழி செயல்
பார்த்தால் மருத்துவர் போலவே தெரியவில்லையே ?. வேதி பொருள்களை வைத்து நிரந்தர ஆண்மை நீக்கம் இவனுக்கு உடனடியாக அவசியம் வேலை நீக்கம் , ஓய்வூதிய பலன்கள் நீக்கம் மிக அவசியம் . பிச்சைக்காரனை போல இவனை சுற்றவிடவேண்டும் .
மாடலின் சிறப்பு.
தூக்கு தண்டேயே இதெற்கெல்லாம் தீர்வுமேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்