அகழாய்வு அனுமதி விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

44

சென்னை: அகழாய்வு அனுமதி விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கீழடியில் 11-வது கட்டம், ஆதிச்சநல்லுார், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின், நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது.


அடுத்து, மத்திய பாஜ அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement