அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
சென்னை: எஸ்.பி., வேலுமணி, உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்ய கோரி திமுக ராஜ்யசபா எம்பி கிரிராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி., வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், வீரமணி, கே.பி.அன்பழகன் ஆகிய7 பேர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு உள்ளதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் வழக்குப்பதிய முகாந்திரம் உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 7 பேர் மீதும் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
ram - mayiladuthurai,இந்தியா
18 மார்,2026 - 15:31 Report Abuse
அதான் aiadmk ex மந்திரிகள் அனைவரும் இப்போது திமுகவில் 0
0
Reply
ஆரூர் ரங் - ,
18 மார்,2026 - 15:06 Report Abuse
2014 வரை மத்திய ஆட்சியதிகாரத்தில் இருந்த நேரத்தில் அப்போதிருந்த அதிமுக அமைச்சர் எம்பி க்கள் மீது அமலாக்கத்துறை விசாரணை இல்லை. UPA ஆட்சியில் 2 ஜி, நிலக்கரி வழக்குகள் பதியப்பட்ட அந்நேரத்தில் அக்குற்றவாளிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதியவில்லை. காரணம்? பங்காளிகளிடையே புரிந்துணர்வு உச்சத்தில் இருந்தது. இப்போ கசந்து விட்டது? 0
0
Reply
மேலும்
-
வளைகுடா போரில் செல்லப்பிராணிகள் கடும் பாதிப்பு; தாயகம் கொண்டுவர இந்தியர்களுக்கு விதிகள் தளர்வு!
-
நேற்று இறக்கம்; இன்று ஏற்றம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
ஈரானில் போராட்டக்காரர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; மனித உரிமை அமைப்பு கண்டனம்
-
வி.சி.,யில் நாளை முதல் விருப்ப மனு
-
தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?
-
விஜயுடன் கூட்டணி அமையுங்கள்: ராமதாசை வலியுறுத்தும் நிர்வாகிகள்
Advertisement
Advertisement