ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும், உயிரிழந்த விளாத்திகுளம் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட 12 ஆம் வகுப்பு மாணவியின் குடும்பத்தாரை இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். உயிரிழந்த மாணவியின் சகோதரியின் படிப்பிற்கு தமிழக பாஜ சார்பாக நிதியுதவி அளிக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிற்குத் தங்களது குலவிளக்கைப் பலி கொடுத்து விட்டு தவிக்கும் அக்குடும்பத்தாரின் கண்ணீர் முகம் என் நெஞ்சில் ஆறா வடுவாக உறுத்துகிறது. குற்றம் நடந்து பல நாட்கள் கடந்து விட்ட போதும், பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக தெருவில் இறங்கி போராடிய பிறகும் கூட அறிவாலயத்தின் ஏவல்துறை இவ்வழக்கில் இன்னும் ஒரு குற்றவாளியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்பது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கே வெட்கக்கேடு. வரும்
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அந்த நீதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பவே கொடுத்து ஆட்சியை பிடிக்கலாமே...
இதற்கும் ஆட்சி மாற்றதிற்கும் என்ன சம்பந்தம்?
குற்றவாளிகள் தெரிந்தால் தைரியமாக இப்போதே அறிவிக்க வேண்டியது தானே
அந்த குடும்பத்துக்கே தெளிவாக தெரியும் இது எல்லாம் அரசியல் ஸ்டண்ட் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்
கடைசி வரைக்கும் உறிய நீதி என்பன்னு ஒரு பய சொல்லமாட்டான். நீதிமன்றத்துக்கே தெரியுமான்னு டவுட்டுதான்.
நீதிமன்றம் நீதி வழங்கும் அது போதாது
இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நாய்களுக்கு தெருவில் மரணதண்டனை கொடுக்க சட்டம் இயற்றுங்கள்
பல லட்சம் மகளிர் ஓட்டு உங்களுக்கு உண்டு