' ஹெராயின் ' கடத்திய தம்பதி கைது

கூடுவாஞ்சேரி: 'ஹெராயின்' போதை பொருள் கடத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

கூடுவாஞ்சேரி ரயில் நிலைய பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 1:30 மணி அளவில், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற , அசாம் மாநில தம்பதியான டிடாருள் ஹூசைன், 33, லுாசியா, 28, ஆகியோரை சோதனையிட்டனர்.

அவர்களிடம் 13.50 கிராம் 'ஹெராயின்' போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement