ஜி.பி.ஏ., கமிஷனரிடம் பா.ஜ.,வினர் மனு

பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் ஐந்து மாநகராட்சிளுக்கு ஜூன் மாதத்துக்குள் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்நிலையில், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மகேஸ்வர் ராவை, நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் சந்தித்து மனு வழங்கினர். அதில், 'வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை பார்க்க, ஜி.பி.ஏ., இணையத்தை பார்த்த போது, பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை என பலர் புகார் தெரிவித்திருந்தனர். எனவே, இதனை சரி செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

Advertisement