தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின் ஒரே நாளில் சாலை அமைத்ததால் சர்ச்சை
வாழப்பாடி:வாழப்பாடி
அருகே பேளூர் டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டு, ஜமால் தெருவில் சில
மாதங்களுக்கு முன், 'பேவர் பிளாக்' சாலை போடப்பட்டது. பின் தேர்தல்
நடத்தை விதிகள் அமலான பின், , அவசர அவசரமாக அதே
வீதியில் மீதி பகுதியில், சிமென்ட் சாலை அமைக்க
கட்டுமா-னப்பொருட்களை இறக்கினர்.
தொடர்ந்து முறையாக
சமன்படுத்தாமல், 67 மீ.,க்கு சாலை அமைக்கும் பணி தொடங்கி, அன்று இரவே
முடிந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலான பின், ஒரே நாளில் சாலை
அமைத்-ததால், சர்ச்சை ஏற்பட்டது.
டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்
மாதவன்(பொ) கூறு-கையில், ''ஏற்கனவே பேவர் பிளாக் சாலை போடப்பட்டது.
பின் அதே வீதியில் இறக்கமாக உள்ள பகுதியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில்
சிமென்ட் சாலை அமைக்க, இரு மாதங்களுக்கு முன் நிதி ஒதுக்கப் பட்டது.
தற்போது அங்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. விதிமீறல் இல்லை.
இருப்பினும் அடிப்-படை நடைமுறை பின்பற்றப்பட்டதா என
விசாரிக்கப்படும்,'' என்றார்.
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
-
கோவில் உண்டியலில் கொள்ளை
-
லாரி - வேன் நேருக்கு நேர் மோதல் கோவில் அர்ச்சகர் உள்பட 2 பேர் பலி
-
குளித்தலை சிறுமியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
-
தொழிலதிபர் மீது வழக்கு ஜோலார்பேட்டை, மார்ச் 18
-
வேட்டைக்கு பன்றி வெடி வைத்திருந்த 3 பேர் கைது