மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் ரூ.7.41 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கரூர்:கரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில், ௭ லட்சத்து, ௪௧ ஆயி-ரத்து, 790 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில், வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் தலைமை

யில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மோகனுாரில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரியை சோதனை செய்த போது, நாமக்கல் மாவட்டம் வடக்காலப்புதுாரை சேர்ந்த சுப்பிரமணி என்பவ-ரிடம், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதததால், 3 லட்சத்து, 79 ஆயிரத்து, 790- ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின், கரூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


அரவக்குறிச்சி அருகே, ஆண்டிப்பட்டி கோட்டை டோல்கேட்டில், நிலையான கண்

காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.நேற்று காலை, 7:42 மணிக்கு மதுரையில் இருந்து சேலம் நோக்கி காரில் பயணம் செய்த, மதுரை பங்கஜம் காலனியை சேர்ந்த, சாந்தாராம் என்ப-வரிடம், 54 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொகைக்குரிய சரியான ஆவணம் இல்லாததால், தொகை பறி-முதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்-டது.


கரூர் அருகே புலியூரில், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அதில், கிருஷ்ணராயபுரம் அருகே பொய்கைபுத்துார் குடித்தெருவில் மகாதேவன் என்பவர் நேற்று மதியம், 3:30 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில், 1 லட்சம் ரூபாய் எடுத்து சென்றார். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதால், அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டது.


தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்திய பின், இரண்டு நாட்களில் கரூர் தொகுதியில், 3 லட்சத்து, 79 ஆயிரத்து, 790- ரூபாய், அரவக்குறிச்சியில், 54 ஆயிரம் ரூபாய், கிருஷ்ணராயபுரத்தில், ஒரு லட்சத்து, 54 ஆயிரம் ரூபாய், குளித்தலையில், 1 லட்சம் ரூபாய் என மொத்தம், 6 லட்சத்து, 87 ஆயிரத்து, 790 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புகழூர் வட்டம், மோலப்-பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், நேற்று மாலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மகேந்-திரா பிக்கப் வாகனத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த நல்லதம்பி, 37, என்பவர் ஆவணமின்றி கொண்டு சென்ற, 54 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement