மனைவி மாயம்; கணவர் புகார் போலீசார் விசாரணை

குளித்தலை:குளித்தலை அடுத்த கழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் சித்திக், 40. இவர் மொபைல் ஷாப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.



இவரது மனைவி ரஜப்நிஷா, 31. இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. ரஜப்நிஷாவுக்கு கடந்த, 16 மதியம் 2:30 மணியளவில் உடல்நிலை சரியில்லாததால், தோகைம-லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வருவதாக, அவரது கணவருக்கு போன் மூலம் தெரிவித்தார். பின்னர் சிகிச்சை முடிந்து மாலை, 4:00 மணிக்கு வீட்டுக்கு செல்வதாக கூறினார்.

இந்நிலையில், ஷேக் சித்திக் தன் மனைவி மொபைலுக்கு போன் செய்தார். அப்போது, தோகைமலை கருப்பு கோவில் அருகேயுள்ள டீக்கடைக்காரர் போனை எடுத்து, கீழே கிடந்ததாக அவரிடம் பேசினார். பின்னர் பல இடங்களில் தேடியும் கிடைக்-காததால், மனைவியை காணவில்லை என, ஷேக் சித்திக் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement