ஈரோடு எஸ்.பி., பொறுப்பேற்பு

ஈரோடு:ஈரோடு எஸ்.பி.,யாக பணியாற்றிய சுஜாதா, தேர்தல் கமிஷனால் மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை தீவிர-வாத தடுப்பு பிரிவு எஸ்.பி., கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.

நேற்று கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார். பின் மரியாதை நிமித்தமாக, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமியை சந்தித்தார். ஏ.டி.எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார், எஸ்.பி.,க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement