கோவிலில் திருட்டு

மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி அருகே சாவடிபாளையம் புதுார் செல்லும் சாலையில் வேல்யூ சிட்டி நகர் உள்ளது. இங்கு பெரிய காண்டி-யம்மன் கோவில் உள்ளது. பூசாரி கோவிலை திறக்க வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.


கருவ-றைக்குள் சென்று பார்த்த போது சுவாமியின் மீதிருந்த வெள்ளி கிரீடம், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு போனது தெரிய-வந்தது. இதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய். மொடக்குறிச்சி போலீசார் களவாணியை தேடி வருகின்றனர்.

Advertisement