வாலிபர் மீது போக்சோ

ஈரோடு:பவானியை சேர்ந்தவர் பூபதி, 22; பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்த நிலையில், கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.

இதில் கர்ப்பமான சிறுமிக்கு, சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. மருத்துவ நிர்வாகத்தினர் அறிவுறுத்தலின்படி, குழந்தைகள் நல குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பூபதி மீது போக்-சோவில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement