காரிமங்கலத்தில் அபாயகரமான முறையில் சாலையை கடக்கும் கல்லுாரி மாணவியர்
தர்மபுரி:தர்மபுரி
மாவட்டம் காரிமங்கலத்திலுள்ள, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்
கல்லுாரி, 2013ல் தொடங்கப்பட்டது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட
மாணவியர் படிக்கின்றனர். கல்லுாரி வளாகம், சேலம் -- பெங்களூரு தேசிய
நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு
கிராம பகுதி-களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம்
கல்லுா-ரிக்கு மாணவியர் வந்து செல்கின்றனர். பலர் விடுதிகளில் தங்கி
படிக்கின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவியர் தேசிய
நெடுஞ்-சாலையை அபாயகரமான முறையில் கடந்து செல்வதை தடுக்க, தேசிய
நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையின் குறுக்கே உயர்-மட்ட நடைபாலம்
அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நடை மேம்பாலம் அமைக்கப்பட்ட
பின்னரும், மாணவியர் பாலத்தை பயன்படுத்தாமல், மீண்டும் அபாயகர-மான
முறையில் சாலையை கடந்து சென்று வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும்
அதிவேக வாகனங்களால், மாண-வியர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவியர் நடை மேம்பாலத்தை
பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த, பெற்றோர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!