சீரான குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பரிதவிப்பு

மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த கெரகோடஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சி.தொப்பம்பட்டியில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்-டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.


இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினி-யோகம் செய்யப்படுவதில்லை. மேலும், ஒகேனக்கல் குடிநீரும் போதுமான அளவிற்கு வழங்கப்படுவதில்லை. இது குறித்த மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 10க்கும் மேற்-பட்ட முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அக்கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

குடிநீருக்காக பெண்கள் குடங்களை, குழாய்கள் முன் வைத்து நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். குடிநீர் கிடைக்காமல், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள திறந்தவெளி கிண-றுகளில் தண்ணீர் எடுத்து வந்து, பயன்படுத்தும் நிலை ஏற்பட்-டுள்ளது. எனவே, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்-டவும், குடிநீர் சீராக வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Advertisement