டீசல் இன்ஜினை மின்சார இன்ஜினாக மாற்றியதால் ரூ.6 ஆயிரம் கோடி சேமித்தது ரயில்வே
புதுடில்லி: ரயில் இயக்கத்தை டீசல் இன்ஜினில் இருந்து மின்சார இன்ஜினுக்கு மாற்றியதால் இந்திய ரயில்வே 6,000 கோடி ரூபாயைச் சேமித்துள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
டீசல் இன்ஜின்கள்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சிக்காலத்தில், 35,000 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. 27,000 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் செலவினங்களில் ஊழியர்களுக்கான ஊதியமே மிகப்பெரிய பங்காக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக எரிசக்திச் செலவு இரண்டாவது மிகப்பெரிய செலவினமாக இருக்கிறது. வருங்காலத்தில் டீசல் இன்ஜின்கள் எல்லாம் படிப்படியாக குறைக்கப்பட்டு முழுமையாக மின்சாரத்தில் ரயில்கள் இயக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு
2014ம் ஆண்டில் பாஜ அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, 'வாக்கு அரசியலுக்கு' மாற்றாக 'செயல்திறன் அரசியல்' (politics of performance) முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய முடிவாக, ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைக்க பிரதமர் மோடி முடிவெடுத்தார். இதன் விளைவாக ரயில்வே அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் இல்லாத வகையில், தற்போது ஆண்டு முழுவதும் புதிய ரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. புதிய திட்டங்கள் தொடங்கப்படுகிறது. ரயில்வே துறையின் நிதி நிலைமை வலுப்பெற்று உள்ளது. கணக்கு விவரங்களை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
இந்த விவாதத்தில், மொத்தம் 210 எம்பிக்கள் கலந்துகொண்டனர். விவாதத்தின் இறுதியில், 2026-27 நிதியாண்டிற்கான ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகளை லோக்சபா ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.
பொதுவாக வடக்கு செல்லும் ரயிலில் உள்ள கழிவறை சுத்தமாக இருப்பதில்லை
மின்சார கட்டணத்தை யார் கட்டுவாங்க என்று இப்ப எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்பார்கள்.
இதென்ன கேள்வி ? நம்ம ஊரு திராவிட மாடல் அணில் தான் .
டிக்கெட் இல்லாமல், முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் காட்டான் கூட்டம் அதிகமாகி உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை தேவை. பெண்களுக்கு இவர்களால் பாதுகாப்பு குறைவு. அதிக பெட்டிகளை முன்பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு, ஏழைகளுக்கு சற்று உயரிய கட்டணத்துடன் அனுமதிப்பது அவசியம்.
மின் தயாரிப்புக்கு நிலக்கரிச் செலவு, சூழல் தாக்கம் உண்டு ஹைட்ரஜன் எரிசக்தி உடனடித் தேவை.
35000 கி மீ புதிய ரயில்பாதையில் தென் மாநிலங்களுக்கு எத்தனை கி மீ என்று சொல்லி இருக்கலாமே. 35000 ல் 35 ஐ எடுத்தது போக மீதி முழுவதும் குன்றியத்துக்குத்தானே.
மத்திய அரசு நிறைய செய்கிறது
உங்க கோபாலபுர குன்றிய எஜமானுக்கு சொல்லுங்க மத்தியரசு திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க சொல்லுங்க. ஆட்டய போட வழியிருந்தால் உடனடியாக ஒத்துழைப்பு கொடுப்பானுங்க குன்றிய அமிச்சரு
உண்மை ...தென் இந்திய மக்களுக்ககு ஸ்வாகா தான் ....டிக்கெட் இல்லாம பயணிகும் பீஹாரிகளுகு தான் ஜாக்பாட் ....
புது கருத்துக்களும், செயலாக்கமும் வரவேற்க தக்க மாற்றங்கள். இப்பொழுதும் ஊழல் இல்லாமல் செயல் படும் ரயில்வே துறைக்கு வாழ்த்துக்கள். 60 வயதுக்கு பின்னர் கூடுதல் வருமானம் ஈட்ட முடியாத மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் அறிவிக்க வேண்டுகிறோம் .
செல்லாது, செல்லாது. அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களது கொள்கை, பா.ஜ.க. ஆட்சியை முழு மூச்சாக எதிர்ப்பது மட்டுமே. தற்போதைய ஈரான் போரில், உலக நாடுகளே பெட்ரோலிய பொருட்களுக்காக பாதிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. தான் இதற்கு காரணம்னு திட்டுவோம். ஈரான் ஒத்துழைப்பு தந்து, இந்தியாவின் பெட்ரோலிய கப்பல்களை விடுவித்தாலும்/ தொடர்ந்து ஒத்துழைப்பு தந்தாலும், பெட்ரோலிய பொருளுக்கு நாட்டில் தட்டுப்பாடு இல்லையென்றாலும், நாங்கள் முழு மூச்சுடன் பா.ஜ.க. வை வசைபாடியே தீருவோம். பா.ஜ.க. ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் ஊழல் புகார் இல்லையென்றாலும், நாங்கள் எங்கள் கொள்கையிலிருந்து பின்வாங்கமாட்டோம்.
சந்தோசம். ஆனால், போதுமான ரயில்கள், குறிப்பாக தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இன்றி மக்கள் கஷ்டப்படுவது மட்டும் தொடர்கிறது. அது போக ரயில்வே முற்றிலும் வெளிப்படைதன்மையுடன் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். காத்திருப்பு பட்டியல் குறைவது, EQ கோட்டா போன்றவற்றில் முழு வெளிப்படை தன்மை இல்லை. RAC வந்த பிறகு சார்ட் தயார் செய்தபின் மீண்டும் waiting list சென்றதெல்லாம் கொடுமை. இது எப்படி நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.
டிக்கெட் எடுக்காம நிறைய வடநாட்டினர் வருகின்றனர். மேலும் Reservation கம்பார்ட்மெண்டில் ஏறி தொல்லை கொடுகின்றனர். பெண்களின் பாதுகாப்பிற்கு ரயில்வே போலீசார் ஒவ்வொரு பெட்டியிலும் இருக்கவேண்டும். இதை செய்தால் ரொம்ப வசதியா இருக்கும்.
நம்ம திராவிட கட்டுமரமே டிக்கெட் எடுக்காம தான வந்துச்சாம். இதுலே வடநாட்டினரை குறை சொல்வது தவறு. வடநாட்டினரும் திராவிட மாடலின் வழியில் நடக்கிறார்கள் என்றுவேனால் பெருமையோடு சொல்லலாம்மேலும்
-
ஆட்சி மாற்றத்திற்கு பின் விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் உரிய நீதி; நயினார் நாகேந்திரன்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கு; ஏப்ரல் 9க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு
-
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய கோரி ஐகோர்ட்டில் திமுக மனு
-
அவை நடைமுறை விதிகளை மறுஆய்வு செய்யுங்கள்; ராஜ்யசபாவில் கார்கே வலியுறுத்தல்
-
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு
-
விமான பயணிகளுக்கு வரப்பிரசாதம்; புதிய விதிமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!