மாணவியை கர்ப்பமாக்கிய மேஸ்திரிக்கு 20 'ஆண்டு'
கிருஷ்ணகிரி:ஆசை
வார்த்தை கூறி, பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கட்-டட மேஸ்திரிக்கு,
20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்-ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம்
உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த
வண்ணாத்திப்-பட்டியை சேர்ந்தவர் மாதப்பன், 33, கட்டட மேஸ்திரி. இவர்,
அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த, 2020ல் வீடு கட்ட சென்-றுள்ளார்.
அப்போது, அந்த வீட்டிலிருந்த பிளஸ் 1 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி
பழகி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி
கர்ப்பமானார். இது குறித்து மாணவி கடந்த, 2021, ஜூலை, 16ல்
தேன்கனிக்-கோட்டை அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, மாதப்பனை
போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, கிருஷ்ணகிரி
மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த, 5 ஆண்டுகளாக நடந்து வந்த
நிலையில் நேற்று தீர்ப்ப-ளிக்கப்பட்டது. நீதிபதி சுதா தன் தீர்ப்பில்,
குற்றம் சாட்டப்பட்ட மாதப்பனுக்கு போக்சோ வழக்கில், 10 ஆண்டுகள்,
மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 10 ஆண்டுகள் என
மொத்தம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, உத்தர-விட்டார். அரசு
தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜ-ரானார்.
மேலும்
-
வடகொரியாவில் தேர்தல் பெயரளவுக்கே… மீண்டும் அதிபர் ஆனார் கிம் ஜாங் உன்
-
சாதனைப் பயணம் தொடரும்; தமிழகம் வளர்ச்சி பாதையில் நடைபோடும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
-
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
-
கோவில் உண்டியலில் கொள்ளை
-
லாரி - வேன் நேருக்கு நேர் மோதல் கோவில் அர்ச்சகர் உள்பட 2 பேர் பலி