தேர்தல் பார்வையாளர் ஆலோசனை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தளி சட்டசபை தொகுதிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகுல் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் , ஓசூர் சட்டசபை தொகுதிக்கு வருகை தந்தார்.ஓசூர் தின்னுார் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில், தேர்தல் பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, ஓசூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-க-லெக்டர் ஆக்ரிதி சேத்தி, தளி சட்டசபை தொகுதி தேர்தல் அலு-வலர் பழனி ஆகியோருடன், தேர்தல் பார்வையாளர் ராகுல்-பாண்டே ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் வாகரே, தாசில்தார் குணசிவா உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement