தாய், குழந்தை சடலம் மீட்பு

பள்ளிப்பாளையம்:நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் ஆற்றுப்பகுதியில் இளம்பெண் மற்றும் குழந்தை சடலம் மிதப்ப-தாக, நேற்று காலை பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார், ஆற்றில் மிதந்த இளம் பெண், குழந்தை சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில், ஈரோடு, அசோகபுரம் பகுதியை சேர்ந்த சங்கீத், 30, என்பவரின் மனைவி தர்ஷினி, 23, மற்றும் 1 வயது பெண் குழந்தை கவியா-ழினி என்பது தெரியவந்தது. தர்ஷினி, சற்று மனநிலை பாதிக்-கப்பட்டவர் என்பதால், ஆற்றில் குழந்தையுடன் இறங்கி, தண்-ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement