லாரி மோதி ஒருவர் பலி

புதுச்சத்திரம்:சேலம், சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 58. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் லெதர் கம்பெ-னியில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு சுமதி, 51, என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும் உள்ளனர். நேற்று மாரியப்பன் தனது குலதெய்வ கோவிலுக்கு செல்ல டூவீ-லரில், நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டி-ருந்தார். நேற்று காலை, 11:30 மணி அளவில் நாமக்கல்-சேலம் சாலையில் களங்காணி மேம்பாலம் அருகே அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால்அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனம், மாரியப்பனின் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் மாரியப்பன் பலியானார். புதுச்சத்-திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement