வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
நமது நிருபர்
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தாக்கப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் கூறியதாவது: ஈரான் மோதலில் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதே தங்களின் உடனடி முன்னுரிமை. பிராந்திய ஸ்திரத்தன்மையின் மீது சவுதி அரேபியா கவனம் செலுத்துகிறது. தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர சவுதி அரேபியா தன்னிடம் உள்ள அனைத்து அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்தும்.
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தாக்கப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஈரானுடன் முன்பு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது.
ஈரானின் மிரட்டல் முயற்சியை கண்டு அச்சப்படவில்லை. ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் எந்தப் பலனையும் அளிக்காது. இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் முன்கூட்டியே தயாராக இருந்து இருக்கிறது.
ஈரானியர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவை எனக் கருதினால் ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை சவூதி அரேபியா கொண்டுள்ளது.
தன்னிடமும் எதிர்கொள்ள பலமும் இருக்கிறது. கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் கூட்டு சர்வதேச நடவடிக்கை தேவை. இவ்வாறு சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் தாக்குதல்
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கத்தார் தெரிவித்துள்ளது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கத்தார் மீண்டும் தாக்கப்பட்டால், ஈரானின் எரிவாயு கிடங்கு மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து (9)
Arul Jeevaraj - Doha,இந்தியா
19 மார்,2026 - 10:59 Report Abuse
இஸ்ரேல் ஈரானை அடிச்ச அடியில இப்போதான் ஈரானுக்கு எதிராக கிளம்ப ஓவொருத்தனுக்கும் தைரியம் வர ஆரம்பிச்சிருக்கு 0
0
Reply
இரானி - ,
19 மார்,2026 - 10:43 Report Abuse
இரான் மீது நடத்தும் இஸ்ரேலை கண்டிக்கத் துப்பில்லை. இரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களைத்தான் தாக்குகிறது. சைடுல கொஞ்சம் டேமேஜ் ஆகும். சைடுல ஆயிலை அதிக விலைக்கு வித்து துட்டு பாருங்க ஷேக் 0
0
Reply
ponssasi - chennai,இந்தியா
19 மார்,2026 - 10:38 Report Abuse
அரபு நாடுகளை கட்டுப்படுத்தி வைப்பதுதான் உலக நாடுகளுக்கும் வாழும் மக்களுக்கும் நல்லது நிம்மதி. வளரவிட்டால் ஈரான் நாடு எப்படி உருவானதோ அதே போல ஒவ்வொரு நாடும் உருவாகும். அடுத்த ஈரானாக ஐரோப்பா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து முழுமையும் இஸ்லாமியர்கள் நிறைந்துள்ளார்கள் என்றாவது ஒருநாள் இங்கிலாந்தில் அல்லாஹ்வின் ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. அரசும் மக்களும் இன்றே விழித்துக்கொள்ளவேண்டும். அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது ஆனால் அதுதான் சரியான முடிவு. 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
19 மார்,2026 - 10:36 Report Abuse
உங்கள் நாட்டில் இருந்து அமரிக்கனை விரட்டுங்கள், ஈரான் வழிக்கு வருவார்கள் அதான் சரியான வழியாக இருக்கும். 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
19 மார்,2026 - 10:17 Report Abuse
அடிமைகளின் நடுவே ஒரே துணிச்சல்காரன் ஈரான் 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
19 மார்,2026 - 09:59 Report Abuse
அமெரிக்கவை எதிர்க பயம் எல்லோரும் சேர்ந்து அவனை கட்டுப்படுத்துங்க அதை விடுத்து உலகயே ஆள நினைத்து மிரட்டும் ட்ரம்பை மிரட்டுங்கள். 0
0
Reply
அருண் பிரகாஷ் மதுரை - ,
19 மார்,2026 - 09:55 Report Abuse
எந்தவொரு நாடும் மற்ற நாட்டிற்கு தொந்தரவு தராத வரை நல்லதுதான். எல்லா பிரச்சனையும் அமெரிக்காவால் வந்தது. மற்ற நாடுகளின் எண்ணெய் வளங்களை கொள்ளை அடிக்க நினைக்கும் அவர்களுக்கு உங்கள் மூலம் பாடம் புகட்டப்படுகிறது.. 0
0
Reply
சந்திரன் - ,
19 மார்,2026 - 09:46 Report Abuse
வாய்யா இப்பத்தான் தூங்கி எந்திருச்சியோ. உடனே நீ பத்து ஏவுகணைகளை ஈரான் மேல உடு நீதான் தைரியமான ஆளாச்சே அப்பால அவன் ஒரு இருபது ஏவுகனைய உம்மேல போடுவான் தமிழ்நாட்ல இருக்க தீய சக்தி திமுக கூட்டணி முஸ்லிம்கள் எவனுக்கு ஆதரவு தரான்னு பாப்போம் 0
0
Reply
Dhinesh - ,இந்தியா
19 மார்,2026 - 09:43 Report Abuse
உங்கள் நாட்டிலிருந்து எந்த தாக்குதலும் ஈரான் மீது நடத்தப்படாது என்று நீங்கள் பொறுப்பேற்று கொள்ளுங்களேன்..... 0
0
Reply
மேலும்
-
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல்; ஈரான் மீது டிரம்ப் ஆத்திரம்
-
இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,705 புள்ளிகள் வீழ்ச்சி
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 சரிவு; 4 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
லாரி மோதி ஒருவர் பலி
Advertisement
Advertisement