எண்கள்
70,000
'ஆ ர்சிலர் மிட்டல்' மற்றும் 'நிப்பான் ஸ்டீல் இந்தியா' நிறுவனங்கள் இணைந்து, ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே ஒருங்கிணைந்த ஸ்டீல் ஆலைக்கு அடுத்த வாரம் அடிக்கல் நாட்ட உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் ஆலை என கூறப்படும் இதில், முதற்கட்டமாக 70,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 82 லட்சம் டன் ஸ்டீல் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2028 இறுதிக்குள் ஒரு பகுதி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும்; 2030க்குள் முழுமையான செயல்பாடுகளை துவக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆலை அமைக்க ஆந்திர அரசு கிட்டத்தட்ட 2,200 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது.
10,00,000
இ லங்கையின் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தில், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 20 அடி நீளம் கொண்ட 10 லட்சம் சரக்கு கன்டெய்னர்களை கையாண்டுள்ளதாக, 'அதானி போர்ட்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை துறைமுக ஆணையம், அந்நாட்டின் 'ஜான் கீல்ஸ் ஹோல்டிங்க்ஸ்' வணிக குழுமம் ஆகியவற்றுடன் அதானி நிறுவனம் இணைந்து கிட்டத்தட்ட 6,800 கோடி ரூபாய் மதிப்பில் இந்த முனையத்தை அமைத்தது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வந்த இந்த முனையம், அதன் முதலாம் ஆண்டிலேயே அதிக கன்டெய்னர்களை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக, அதானி போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும்
-
தேர்தல் கமிஷனர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
-
திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்: முதல்வர் ஸ்டாலின்
-
விளாத்திகுளம் மாணவி வழக்கில் தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்; ஏப்ரல் 2 வரை காவல்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் செய்தி தொடர்பாளர் உயிரிழப்பு
-
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
-
தேர்தலில் எப்படி ஓட்டு போடணும்! கல்லுாரியில் மாதிரி ஓட்டுப்பதிவு