சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் உரிமம் பெற்ற துப்பாக்கி ஒப்படைப்பு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்
சுற்று வட்டார பகுதிகளில், சட்டசபை தேர்த-லையொட்டி, 20க்கும்
மேற்பட்டோர் உரிமம் பெற்ற தங்களது துப்பாக்கிகளை, சேந்தமங்கலம்
போலீஸ் ஸ்டேஷனில் ஒப்ப-டைத்தனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல்
ஏப்., 23ல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த, 15ம்
தேதி முதல் அம-லுக்கு வந்துள்ளது. தேர்தலை அமைதியான முறையில்
நடத்துவ-தற்கு ஏதுவாக, தமிழகம் முழுவதும் முறையாக உரிமம் பெற்று
துப்பாக்கிகளை வைத்திருக்கும் அனைவரும், தேர்தல் முடியும் வரை
அவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க
வேண்டும்.
பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்புகை சீட்டை பெற்று கொள்ள
வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு ஒப்புகை சீட்டை, போலீஸ் ஸ்டேஷனில்
கொடுத்து விட்டு துப்பாக்கியை பெற்று கொள்ளலாம். கடந்த மூன்று
தினங்களாக, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் துப்பாக்கி
வைத்திருந்த, 20க்கும் மேற்பட்டோர் சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில்
தங்களது துப்பாக்கியை ஒப்படைத்தனர்.
மேலும்
-
வளைகுடா போரில் செல்லப்பிராணிகள் கடும் பாதிப்பு; தாயகம் கொண்டுவர இந்தியர்களுக்கு விதிகள் தளர்வு!
-
நேற்று இறக்கம்; இன்று ஏற்றம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
-
ஈரானில் போராட்டக்காரர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; மனித உரிமை அமைப்பு கண்டனம்
-
வி.சி.,யில் நாளை முதல் விருப்ப மனு
-
தி.மு.க., அணியில் இருந்து மா.கம்யூ., வெளியேறுகிறதா?
-
விஜயுடன் கூட்டணி அமையுங்கள்: ராமதாசை வலியுறுத்தும் நிர்வாகிகள்