நள்ளிரவில் தி.மு.க., அவசர ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்., தவிர்த்து தி.மு.க., கூட்டணி நிர் வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜிவ் சிக்னல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.

காங்., தி.மு.க., கூட்டணி உறுதி செய்யப்படாததால், புதுச்சேரியில் காங்., தவிர்த்து தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளிலும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இ.கம்யூ., வி.சி., கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement