குக்கர் சின்னத்தில் தான் போட்டி; அமமுக தினகரன் அறிவிப்பு

12

சென்னை: நாங்கள் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.



டில்லிக்கு பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சென்று முக்கிய தலைவர்களை சந்திக்க இருக்கின்றனர். சென்னையில் டில்லி பயணம் குறித்து தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியுமா? இது கூட முதல்வருக்கு தெரியாதா? எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அதையெல்லாம் கபளீகரம் செய்வதால் தான் மக்கள் உங்களை மாற்ற துடிக்கிறார்கள். தேஜ., தலைவர்களை சந்திக்க டில்லி செல்கிறேன்.


தொகுதிப்பங்கீடு முடிவுகள் இன்னும் 4 நாட்களில் சுமூகமாக எடுக்கப்படும். நாங்கள் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். ஊடகங்களில் ஊகங்கள் வாயிலாக வெளியிடப்படும் செய்திகளை கூறுவது போல் அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.


இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு தொடங்கவில்லை. நான் இனிமேல் தான், எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இபிஎஸ் இடம் கோரிக்கை விடுக்க உள்ளேன். இவ்வாறு தினகரன் கூறினார்.

Advertisement