சேலம் அருகே தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி குழந்தை உட்பட 7 பேர் பலி
நமது நிருபர்
சேலம் உத்தமசோழபுரம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
சேலம் உத்தமசோழபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அந்த பஸ், சாலையோரம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் (டெம்போ) மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 2 பேர், டெம்போவில் பயணம் செய்த 11 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.
போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
@block_P@
இரங்கல்
இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ''அரசு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.block_P
வாசகர் கருத்து (8)
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
20 மார்,2026 - 17:22 Report Abuse
நவீன பேருந்து முனையங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டுனா துட்டுக்கு துட்டு, முத்தமிழறிஞர் பெயரையும் வைக்கலாம்..என்ன பொருத்தம் ..அதாவது ஒரு கல்லுல ரெண்டு மங்கா அப்படீன்னு பேசிக்கறாங்க . 0
0
Reply
v.r.rajagopalan - ,இந்தியா
20 மார்,2026 - 16:18 Report Abuse
மிகவும் வருத்தமான செயதி. எத்தனால் இது நடந்தது என்பதை முழுவதும் விசாரிக்க vendum. 0
0
Reply
PATTALI - chennai,இந்தியா
20 மார்,2026 - 15:45 Report Abuse
அவங்களுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொன்னா யாராவது காதுல வாங்கினாதான. 0
0
Reply
Ram - ottawa,இந்தியா
20 மார்,2026 - 15:36 Report Abuse
தி மு க ஆட்சியில் கொள்ளையடித்து தரமற்ற பேருந்துகளை இயக்கினால் இதுதான் ஆகும் . மக்களால் ஓட்டுப்போட்டதுக்கு உயிரைக்கொடுக்கிறார்கள் 0
0
Reply
Ram pollachi - ,
20 மார்,2026 - 13:50 Report Abuse
உரிய நிவாரணம் எப்படி கிடைக்கும்? காப்பீட்டு செய்யாத பேருந்து.. இருக்கிற பேருந்துகளை நன்றாக பராமரிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு நவீன பேருந்து முனையம் எல்லாம் தேவையா? பொள்ளாச்சியில் திறப்பு விழா கண்ட பேருந்து நிலையத்தில் பஸ் வருவது இல்லை, இருபதுக்கு மேற்பட்ட கடைகளுக்கு ஏலம் விடவில்லை ஆனால் சினிமா சூட்டிங் மட்டும் நடத்த அனுமதி கிடைக்கிறது... 0
0
Reply
Chandru - ,இந்தியா
20 மார்,2026 - 13:32 Report Abuse
லொட லொட மாடல் அரசு 0
0
Reply
raju - TIRUNELVEL,இந்தியா
20 மார்,2026 - 13:16 Report Abuse
பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன . இலவச பஸ் சர்வீஸல் பழைய பஸ்களை மாற்ற நிதி இல்லை, பராமரிக்க நிதி இல்லை, இதனால் அப்பாவி உயிர்கள் பறிபோனது இவர்களை நம்பிஉள்ள குடும்பம் நடுத்தெருவில் , இது தான் திராவிட மாடல் ஆட்சி. 0
0
Reply
Prabu - Singampunari,இந்தியா
20 மார்,2026 - 12:29 Report Abuse
திராவிட பஸ் 0
0
Reply
மேலும்
-
தேர்தல் கமிஷனர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
-
திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்: முதல்வர் ஸ்டாலின்
-
விளாத்திகுளம் மாணவி வழக்கில் தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்; ஏப்ரல் 2 வரை காவல்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் செய்தி தொடர்பாளர் உயிரிழப்பு
-
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
-
தேர்தலில் எப்படி ஓட்டு போடணும்! கல்லுாரியில் மாதிரி ஓட்டுப்பதிவு
Advertisement
Advertisement