பாலியல் வழக்கில் தண்டனை; முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் சரணடைய விலக்கு
புதுடில்லி: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைவதற்கான விலக்கை மேலும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புர மாவட்ட நீதிமன்றம், கடந்த 2023ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தள்ளுபடி செய்த நீதிபதி, உடனே சரணடைய உத்தரவிட்டார்.
தொடர்ந்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சரணடைவதில் இருந்து ஏற்கனவே உள்ள விலக்கை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மறு ஆய்வு மனுவை விரைவாக விசாரித்து, வழக்கை முடிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட்டனர்.
காவல்துறையையும் நீதித்துறையையும் முழுவதும் மூடிட்டு போங்கடா, கேவலமான நாடு இந்தியா
தன் மீதான பாலியல் வழக்கை தானே விசாரித்து தானே நிரபராதி என்று தீர்ப்பளிக்கும் நீதியரசர் இருக்கும் நாட்டில் இது ஒன்று பெரிய ஆச்சர்யம் இல்லை. அதனால் தான் அந்த நீதியரசர் ஓய்வு பெற்றதும் ராஜ்ய சபா உறுப்பினர் ஆனார்
இந்த மாதிரியான நபர்களுக்குத்தான் இந்தியாவில் சுதந்திரம் . சாமானிய ஏழைக்கு எது வும் கிடைப்பதில்லை.
அவரை டிஜிபி என்று சொல்லுவதே தவறு , எப்ப அவரு ஒரு குற்றவாளி
எல்லாருக்கும் இந்த சலுகை கிடைக்குமா?,
போக்கத்த வழக்கு. காசு விளையாடுது. நீதிமன்றம் எல்லாம் மூடிட்டு வேற ஏதாவது தொழில் பண்ணுங்க.வரி இல்லாத தொழில்.
இப்படித்தான் ஒரு பாலியல் ஆயுள் தண்டனை குற்றவாளியை ஜாமீன்ல விட்டீங்க இப்போ அவன் ஒரு பெண்ணை கெடுத்து கொலை செய்துவிட்டதா சொல்றாங்க ஏன் குற்றவாளிகளுக்கு கருணை காட்றீங்க
Some rapists are more equal than others.
சாரோட ஊட்டுக்காரம்மா கொஞ்சம் மாசம் முன்னாடி போயி சேர்ந்துட்டாங்க ......மேலும்
-
தேர்தல் கமிஷனர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
-
திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்: முதல்வர் ஸ்டாலின்
-
விளாத்திகுளம் மாணவி வழக்கில் தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்; ஏப்ரல் 2 வரை காவல்
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர படையின் செய்தி தொடர்பாளர் உயிரிழப்பு
-
காங்கயம் தொகுதியில் புகாரா? மொபைல் போன் எண் அறிவிப்பு
-
தேர்தலில் எப்படி ஓட்டு போடணும்! கல்லுாரியில் மாதிரி ஓட்டுப்பதிவு