சூலூரில் இப்தார் நோன்பு அ.தி.மு.க.வினர் பங்கேற்பு

சூலூர்: சூலூரில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.பங்கேற்றார்.

சூலூர் மசூதியில் புனித ரம்ஜானை ஒட்டி, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடந்த இந்த நிகழ்வில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கந்தசாமி, சூலூர் நகர செயலாளர் கார்த்திகை வேலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

சூலூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர் நோன்பில் பங்கேற்றனர். அனைவரும் நோன்பு கஞ்சி அருந்தி, ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement