அரையிறுதியில் இந்திய ஜோடி
மோர்லஸ்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் அரையிறுதிக்கு இந்தியாவின் அர்ஜுன், ரித்விக் ஜோடி முன்னேறியது.
மெக்சிகோவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அர்ஜுன், ரித்விக் ஜோடி, இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற ஜெர்மனியின் மார்க் வால்னர், ஜாகோப் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை இந்திய ஜோடி 7-5 என வென்றது. இரண்டாவது செட்டிலும் அசத்திய இந்திய ஜோடி 6-4 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 15 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் அர்ஜென்டினாவின் பகண்டோ, மெக்சிகோவின் ரோட்ரிகோ ஜோடியை சந்திக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Advertisement
Advertisement