மூன்று இடங்களில் தடுப்பு அணைகள்
தேனி: மாவட்டத்தில் 3 இடங்களில் வண்டல் மண் தடுப்பு நிலையங்கள் அமைக்கும் பணி துவங்கி உள்ளதாக வேளாண் பொறியியல் துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: ஆற்றில் வண்டல் மண் அதிக அளவில் அடித்து செல்வதை தவிர்க்க சிற்றாறுகள், ஓடைகளில் வண்டல் தடுப்பிற்காக சிறிய தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.
இதற்காக சோதனை முறையில் வைகை ஆற்றில் முத்தலாம்பாறை, சிங்கராஜபுரம், போடியில் என 3 இடங்களில் ரூ.34 லட்சம் மதிப்பில் 3 வண்டல் மண் தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன.
இவற்றில் படியும் வண்டல் மண் 3 முதல் 6 மாதங்களுக்கு கணக் கிடப்படும்.
அதன் அடிப்படையில் அப்பகுதிகளில் உள்ள ஓடைகள், சிற்றாறுகளில் வண்டல் மண் தடுப்பணைகள் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும். மூன்று வண்டல் தடுப்பணைகள் அமைக்கும் பணி தற்போது துவங்கி உள்ளது என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement