தகராறை தடுத்த பெண் கொலை
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே தகராறை தடுத்த பெண்ணை தள்ளி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா ஒழுகைமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத், 40; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது தாய் மாமன் பேச்சிமுத்து, 55; என்பவருக்கும் இடத்தகராறில் முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு வினோத்திற்கும் பேச்சிமுத்துவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, பேச்சிமுத்து மனைவி அல்லிராணி, 54; விலக்கி விட்டுள்ளார். ஆத்திரமடைந்த வினோத், அல்லிராணியை பிடித்து தள்ளி உள்ளார். தடுமாறி அங்குள்ள சுற்றுச்சுவரில் மோதிய அல்லிராணியின் தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.
புகாரின்பேரில் பொறையார் போலீசார் வழக்கு பதிந்து வினோத்தை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது
Advertisement
Advertisement