ஆம்புலன்ஸ் ஊழியருக்கு வழிமுறை

ஈரோடு:தேர்தல் நேரத்தில், 108 அவசர கால ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து, தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரை:

ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், இதர உபகரணங்கள், ஆவணங்கள் தவிர வேறு எந்த பொருட்கள், சாதனங்கள் வைத்து கொள்ளக்கூடாது.

அவசர சேவையில் ஈடுபட்டிருக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்-களில் அனுமதி இன்றி எந்த நபரும் ஆம்புலன்ஸில் ஏற அனும-திக்கப்பட மாட்டார்கள். போலீஸ் அதிகாரி கள், தேர்தல் கண்கா-ணிப்பாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ்களை ஆய்வு செய்ய, ஆவணங்களை சரி பார்க்க அனுமதிக்கப்படுவர்.


அவசர கால சேவை நேரங்களில் நோயாளி, நோயாளியுடன் இருவர், மருத்துவ ஊழியர் மட்டும் அனுமதிக்கலாம். தேர்தல், பிரசார பொருட்கள் உள்ள இடங்களில் அவசர சேவை வாகனங்-களை நிறுத்திக்கூடாது. நிர்வாக முன் அனுமதி இன்றி நோயா-ளியின் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதிக்கக்கூடாது. இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அறிவுரை வழங்-கப்பட்டுள்ளது.

Advertisement