தேர்தல் பணிக்கு இடையூறு : பா.ஜ., நிர்வாகிக்கு 'காப்பு'
பேராவூரணி: பணி செய்யவிடாமல் தடுத்ததாக, தேர்தல் பிரி வு அலுவலர் அளித்த புகாரில், பா.ஜ., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அப்போது, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்புக்குழு அலுவலருமான ராஜ்குமார் தலைமையிலான குழுவினர், கூட்டத்தை வீடியோ எடுக்க சென்றனர் .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பா.ஜ., பொதுச்செயலர் வீரசிங்கம், 56, வாக்குவாதம் செய்தார்.
அரசு அலுவலரான தன்னை, தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்ததாக, ராஜ்குமார் அளித்த புகாரில், பேராவூரணி போலீசார், இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, வீரசிங்கத்தை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி
-
விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
-
அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்
-
'ஏசி' பெட்டியில் காப்பர் ஒயர் திருடிய சிறுவன் சிக்கினான்
-
எம்.கே.பி., நகர் வடக்கு நிழற்சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு 'நோட்டீஸ்'
Advertisement
Advertisement