தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக்கொலை; இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு
நமது நிருபர்
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23) மாலை 4 மணிக்கு மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு அளிக்கிறார்.
கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பால கிருஷ்ணன், ராகு கணேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ தரப்பில் 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 400 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில இந்த வழக்சின் விசாரணை நடைபெற்று வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் தமது தரப்பு வாதத்தை கோர்ட்டில் முன் வைத்தார். அதேபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் வாதங்கள் மூன வைக்கப்பட்டன.
அனைத்துத் தரப்பு விசாரணைகள், வாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இன்று (மார்ச் 23) மாலை 4 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளார்.
அதிகபச்ச தண்டனை கொடுக்க வேண்டும்.. இரண்டு உயிர்கள் தவறே செய்யாமல் கொலை செய்ய பட்டுள்ளார்கள்.. நீதிமன்றம் தயவு தாட்சண்யமின்றி தண்டனை கொடுக்க வேண்டும்..
நீதிபதிகள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த கதி ஏற்பட்டால் என்ன தண்டணை தர வேண்டும் என்று நினைக்கிறார்களோ? அந்த தண்டனையை நேர்மையுடன், நாணயத்துடன், நீதி தேவதைக்கு துரோகம் புரியாமல், பாரபட்சமற்ற தீர்ப்பு இன்று மாலை 4மணிக்கு அநீதிக்கு துணைபோகாமல், கோடிகணக்கான பணத்துக்கும், அரசியல் பின்னனி அச்சுறுத்தல் உயிர் மீது பயப்படாமல், தமிழக மக்களுக்கு நீதி துறை மீது ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்த, தாலி அறுத்து குடும்பத்தை நடு ரோட்டில் நிறுத்திய கொலை வெறியர்களுக்கு " தூக்கு தண்டணை" உயிர்போகும் வரை தீர்ப்பு வழங்கவேண்டும் என்று தமிழக மக்கள் வழிப்புணர்வோடு காத்துக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு குறைவாக நீதிபதிகள் தீர்ப்பு அளித்தால் சட்டம் அரசியல் உருட்டல் மிரட்டல் பணம் பலத்துக்கு அடி பணிந்து விட்டது என்பது அர்த்தமாகும்? இனி தமிழக மக்களுக்கு நீதி துறை மீது நம்பிக்கை வராது? நீதிபதி பக்கத்தில் கண் கட்டி இருக்கும் நீதி தேவதையை தூக்கி போட்டு விடலாம். முடிவாக எதிர்பார்க்கும் தீர்ப்பு" இறைவன் தீர்ப்பாகும் தமிழக மக்களே?
தூக்குதண்டனை தவிர எது குடுத்தாலும் அநீதி.
தீர்ப்பு மட்டும் இப்படி வந்தது என்றால் நான் ரொம்ப கடுப்பாயிடுவேன். எப்படி? "குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது போதிய ஆதாரங்கள் இல்லாமையால் அவர்களை இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது" என்று மட்டும் தீர்ப்பு வரட்டும், பிறகு இருக்கு.
கடுப்பாகி செய்ய போகிறாய்?
மனிதாபம் இல்லாத கொலைகள். அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் ஒரு எடுத்துகாட்டு
கீழ் கோர்ட் தண்டனை கொடுத்தாலும் சுப்ரீம் கோர்ட் சாட்சிகள் சரியாக இல்லை என கூறி விட்டு விற்று விடும் .இது தானே நடைமுறை
வாச்சாத்தியில் ஏழைகள் தாக்கப்பட்டு பாலியல் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் 269 அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு கோர்ட் 10 ஆண்டுகள்வரை தண்டனை விதித்த அடுத்த நாளே அவர்களை விடுதலை செய்தார் முதல்வர் கருணாநிதி. அரசு, காவல்துறை அலுவலர்கள் மற்றும் சாதி வாக்குவங்கி முக்கியம் சார்
தூக்கு தண்டனையை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் நீதி மன்றத்தை நம்புவார்கள். ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்புக்கள் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிற கூடாரம் போல் உள்ளது என்பதை மறக்க முடியாது.
தீர்ப்பு ஒன்றும் கடுமையாக இருக்க வாய்ப்பில்லை. அதிக பட்சம் காவற்துறையின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கிறோம் என்று சொல்லி சில அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்யப் பரிந்துரை செய்வார்கள். இரட்டைக் கொலையுடன் நீதியும் சேர்ந்து கொலையாகலாம். திட்டமிட்டுக் கொலை செய்வது, கொடூரமான முறையில் கற்பழிப்பு மற்றும் கொலை நம் இறையாண்மையை கேள்விக் குறியாக்கும் குற்றங்கள் உயிர்காக்கும் மருந்து உணவு இவற்றில் கலப்படம் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கி மேல் முறையீட்டுக்கு அனுமதியின்றி காலத்தில் நிறைவேற்றினால் மட்டுமே நாட்டில் இக்குற்றங்கள் சிறிது குறையலாம்
இந்த 5 ஆண்டுகளில் அதைவிட மிகப்பெரிய குற்றங்களுக்கு எப்ஐஆர், விசாரனை, தீர்ப்பு வரவேண்டும்.மேலும்
-
சென்னையில் இனிதாக
-
அரசு பள்ளியில் அடிப்படை வசதி கோரி பி.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
-
பொன்னேரியில் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
-
தேர்தல் விளம்பரத்தில் இருவாச்சிக்கு கவுரவம்
-
பறிமுதல் செய்தது ரூ.8 லட்சம்: திரும்ப வழங்கியது ரூ.4.75 லட்சம்
-
மக்கர் செய்த எஸ்கார்ட் ஜீப்: தள்ளி ஸ்டார்ட் செய்த போலீசார்