நடுவீதியில் நிற்கும் மின்கம்பத்தால் அவதி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடுவீதியில் இருக்கும் மின்கம்பத்தால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

இவ்வொன்றியத்தில் எஸ்.மாத்தூர் ஊராட்சியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமிண்ட் ரோடு அமைக்கப்பட்டது. நடுரோட்டில் இருந்த மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்றாமல் ரோடு போடப்பட்டது.

இதனால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அவ்வழியாக செல்லமுடிவதில்லை. பல முறை வலியுறுத்தியும் மின்கம்பம் அகற்றப்படவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement