டூவீலர் திருட்டு

சிவகங்கை:சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர் ஜானகி 42. இவரது மகன் தொழிற்பேட்டையில் உள்ள வாட்டர்கேன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணி செய்கிறார்.

ஜானகி பெயரில் உள்ள டூவீலரை அவரது மகன் பயன்படுத்தி வந்தார். மார்ச் 26 இரவு 9:00 மணிக்கு தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு துாங்க சென்றார். மார்ச் 27 காலை 5:30 மணிக்கு எழுந்து பார்த்தபோது டூவீலரை கானவில்லை.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement