குருத்தோலை பவனி

திண்டிவனம்: திண்டிவனத்தில் கிறிஸ்தவர்கள் பங்கேற்ற குருத்தோலை பவனி நடந்தது.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி நடப்பது வழக்கம். திண்டிவனத்தில் சி.எஸ்.ஐ., நல்மேய்ப்பர் கிறிஸ்தவ ஆலயம் சார்பில் ைஹடா ஸ்கடர் பெண்கள் விடுதியிலிருந்து குருத்தோலை பவனி துவங்கியது. நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி பங்கேற்றனர்.

ஊர்வலம் இறுதியாக சி.எஸ்.ஐ., நல்மேய்ப்பர் ஆலயத்தை வந்தடைந்து. ஆலயத்தின் ஆயர் மேசாக் வர்மன் தலைமையில், செயலாளர் ஆல்படர் ஞானஒளி, பொருளாளர் ஜெபராஜ், பொறுப்பாளர்கள் மேத்யூபால், ஆல்பர்ட்ஜான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement