வாகனம் கவிழ்ந்து ஓட்டுனர் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை: வாகனம் கவிழ்ந்த விழுந்ததில், வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் பைவாரிகாலன் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்புபால், 25. பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

போர்க் லிப்ட் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தவர், நேற்று வாகனத்தை பின்னோக்கி இயக்கும் போது, வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement