ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே நண்பர்களுடன் ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த வடகரைதாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் மகன் சுஜித், 11; ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தனது தம்பி யோகேஷ் மற்றும் நண்பர்களுடன் நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியில் உள்ள ஏரியில் குளித்தார்.
அப்போது சுஜித் நீரில் மூழ்கினார். உடன், அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் சிறுவனை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சுஜித் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
Advertisement
Advertisement