விஜய் வேட்பு மனு திருச்சி கிழக்கில் ஏற்பு; பெரம்பூரில் நிறுத்தி வைப்பு
நமது நிருபர்
பெரம்பூரில் பாமக எதிர்ப்பு தெரிவித்ததால் விஜய் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. திருச்சி கிழக்கில் அவரது மனு ஏற்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி துவங்கியது. அரசு விடுமுறை நாட்கள் போக, நேற்றுடன் சேர்த்து 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதன் மூலம் சட்டசபை தேர்தலுக்கான போட்டியில் 7,400க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் 628 மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 07) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடந்து வருகிறது. பெரம்பூர் தொகுதியில் விஜய் பெயரில் சொத்து வரி செலுத்தப்படவில்லை எனக் கூறி பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் திருச்சி கிழக்கில் விஜய் மனு ஏற்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தம் 66 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதேபோல் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி, சாத்தூரில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா வேட்புமனு பரிசீலனை, சுயேச்சை வேட்பாளர் ஆட்சேபத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்கப்பட்டது.
தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி வேட்புமனு ஏற்கப்பட்டது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
@block_G@
தள்ளுபடி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. எழுத்துப்பிழை மற்றும் மனுவை நிரப்பவில்லை என தள்ளுபடி செய்யப்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.block_G
வாசகர் கருத்து (16)
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
07 ஏப்,2026 - 21:02 Report Abuse
எல்லாம் டிராமா.. திருச்சி கிழக்கில் இரண்டு போட்டியாளர்கள்..இனிகோ இருதயராஜ் & சோசப்பு.. ஓட்டு பிரியும் இரண்டுமே திருச்சபை, பாவமன்னிப்பு வகையறா.. இந்த அழகில் ரெண்டு பயல்களும் தன்னை பிள்ளை சாதி என்று சொல்லி கொள்கிறார்கள்.. இவர்கள் உண்மை சாதி எது என்பத ஏசுவுக்குத்தான் தெரியும்..திருச்சபைக்குள் தகராறு வருவதை தவிர்க்க, உங்கள் ஓட்டு கிறிஸ்தவருக்கு மட்டுமே என்று மொட்டையாக பாதிரி சொல்லி விட்டு எஸ்கேப் ஆனால் ஓட்டு பிரிந்து என்டிஏ அணிக்கு சாதகமாகும்.. பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி ஜெயிப்பதை திமுக எதிர்க்காது..தலித் ஓட்டுக்கள் திமுகவுக்கு எதிராக திரும்புவதை திமுக விரும்பாது.ஒரே ஒரு தொகுதிக்காக ஒட்டுமொத்த தலித் ஓட்டு வங்கியில் ஓட்டை விழுவதை திமுக விரும்பாது..ஆக ஜோசப் விஜய் வேறு தொகுதிகளில் பிரசாரத்தை முனைப்புடன் செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு... நெருக்கடி ஜோசப்புக்கு உருவாக்கப் படுகிறது... 0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
07 ஏப்,2026 - 16:14 Report Abuse
சிதம்பரம் தொகுதி தாவேக வேட்பாளர் மனு தள்ளுபடி, காரணம் எழுத்துப்பிழை மற்றும் மனுவை நிறப்பவில்லை__: அடேய், நீங்க வேற ஏன்டா அசிங்கப்படுத்துரிய.. 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07 ஏப்,2026 - 15:11 Report Abuse
கைநாடெல்லாம் அரசியலுக்கு வந்தால் இப்படித்தான். இன்னும் ஆட்சியை பிடித்துவிட்டால் மகா கேவலம். 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
07 ஏப்,2026 - 13:45 Report Abuse
திருச்சி கிழக்கு விஜய் ஜெயிப்பார் 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 13:30 Report Abuse
ஸ்டாலின் சார், என் வேட்பு மனு எடுத்துக்கிட்டு என் வீட்டுக்கு வாங்க 0
0
Senthoora - Sydney,இந்தியா
07 ஏப்,2026 - 14:00Report Abuse
நீங்க உங்க கிராம வரியா தலைவர் அவுங்க. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
07 ஏப்,2026 - 13:16 Report Abuse
இவர் வேனில் பின்னால் ஓடுவதும், அடிபட்டு ரோட்டில் கிடப்பதும் படித்த தமிழ்நாடா என்று கேள்வியை கேட்க வைக்கிறது. அரசியல் கூட்டம் இவர்களுக்காக உயிரை விடுவது மிக கேவலம். 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
07 ஏப்,2026 - 13:03 Report Abuse
எல்லாம் திரை மறைவு நாடகங்கள். பதவிக்கு வரும் வரையில் சண்டையிடுவார்கள். பிறகு திரைமறைவில் நண்பர்களாக தங்கள் நலன் பேணுபவர்களாக தங்களை பார்த்துக் கொள்வார்கள். 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 12:55 Report Abuse
எதற்கும் இருக்கட்டும் என்று வட்டிகனிலும் ஒரு வேட்பு மனு சமர்த்திருக்கலாம் அல்ல. 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
07 ஏப்,2026 - 13:19Report Abuse
பின்னர் ஹிந்து மதம் பேசி வாடிகன் சென்று போப் ஐ ஆரத்தழுவி கூட்டத்திற்கு தெரியாத என்ன 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
07 ஏப்,2026 - 12:27 Report Abuse
இரண்டு மூஞ்சியும் ஒன்னு போல் இருக்கு. ஒருத்தன் முகமூடி மற்ட்ரோருவன் பயிற்சி மாணவன் போல 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
07 ஏப்,2026 - 12:19 Report Abuse
ஆனால் ஒன்று பெருந்தன்மையோடு இருந்த விஜய் எவனோ ஒரு ஜோசிய காரன் உசுப்பேத்தி இப்படி இவரை EXPOSE செய்து அசிங்க படுத்த வெச்சிட்டான் இப்படி தான் ரஜினி க்கு சொல்ல அவர் உசார் ஆகி கடைசி நேரத்தில் ஒதுங்கி கொண்டார் எல்லாம் ஜோசியம் படுத்தும் பாடு 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
திருவிழாவில் தினமும் அம்மன் திருவீதி உலா
-
ஆடிவெள்ளி, தை வெள்ளி சிறப்பு
-
விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: கிலோ ரூ. 157.99 க்கு விற்பனை
-
நன்மைகளை வழங்கும் பவுர்ணமி பூஜை
-
அணையில் மதகுகள் மாற்றும் பணி: இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள்; பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்
Advertisement
Advertisement