வெளிமாநில மதுபாட்டில் கடத்திய நபர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்கில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார், வி.அகரம் பாட்டை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், 667 புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், அவர், விழுப்புரம் அடுத்த ஒருகோடி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், 41; என்பது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து ஸ்கூட்டர் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே: விறுவிறு அரசியல் செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின்; நடைபயிற்சியில் ஓட்டு சேகரிப்பு
-
8,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்காத கல்வித்துறை; மாணவர்கள் பாதிப்பு
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்
-
சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு ஜவாஹிருல்லா சென்றது ஏன்? ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
-
தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
Advertisement
Advertisement