பறக்கும்படை சோதனையில் ரூ.56 ஆயிரம் பறிமுதல்

தொண்டாமுத்தூர்: சட்டசபை தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவாணி மெயின் ரோடு, மாதம்பட்டியில், பறக்கும் படை அலுவலர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சிங்காநல்லூரை சேர்ந்த செந்தில்குமாரிடம் சோதனை நடத்தப்பட்டது. உரிய ஆவணங்களின்றி, ரூ.56 ஆயிரம் கொண்டு செல்வது தெரிந்தது. பணத்தை பறக்கும் படையினர், பறிமுதல் செய்தனர்.

Advertisement