காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பா.ம.க., - வி.சி., கட்சி நேரடி மோதல்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக டாக்டர் அன்பு சோழன் மீண்டும் போட்டியிடுகிறார்.

காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கும், தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ம.க.,வில் மருத்துவர் அணி மாநில செயலாளர் டாக்டர் அன்பு சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மீண்டும் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனும், பா.ம.க., மருத்துவர் அணி டாக்டர் அன்பு சோழனும் போட்டியிட்டு இருவரும் அ.தி.மு.க.,விடம் தோல்வியடைந்தனர். இத்தேர்தலில் அன்புசோழன் அ.தி.மு.க., கூட்டணியிலும், திருமாவளவன் தி.மு.க., கூட்டணியில் மீண்டும் வேட்பாளராக களம் காண்பது குறிப்பிடதக்கது.

Advertisement