மதுபான கடைகள் மூட உத்தரவு 

கடலுார்: மகாவீர் ஜெயந்தி தினமான இன்று மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

மகாவீர் ஜெயந்தி தினமான இன்று கடலுார் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து எப்.எல் 1 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் எப்.எல் 2, எப்.எல் 3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்கள், மதுபானக் கூடங்களை மூடவும், மதுபானம் விற்பனை மேற்கொள்ள கூடாது. அரசு உத்தரவை மீறி மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல் 2 மற்றும் எப்.எல்.3 உரிமதாரர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement