செவியில் விசிலை ஊதி அனுப்புங்கள்: பிரசாரத்தில் விஜய் வேண்டுகோள்

16

சென்னை: ''வண்டி வண்டியாக வைத்திருக்கும் பணத்தை ஓட்டுக்கு கொடுத்து, எப்படியாவது வெற்றி பெற நினைப்பர்; எல்லாவற்றையும் வாங்கி கொள்ளுங்கள்,'' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறினார்.

சென்னையில் நேற்று பெரம்பூர், கொளத்துார் உள்ளிட்ட தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

வட சென்னையின் அடையாளமாக இருக்கும் பெரம்பூரில் இருந்து பிரசாரத்தை துவங்குகிறேன். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சட்டம் - ஒழுங்கு சரியில்லாத, போதைப் பொருள் அதிகமாக உள்ள தமிழகத்தை, நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தமிழகத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தது, தீயசக்தி தி.மு.க., தான்.

ஒன்றுக்கும் உதவாமல் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்திவிட்டு, சிறப்பான ஆட்சியை நடத்தியதாக உதார் விட்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின் சார். சோறு, தண்ணீர் கூட இல்லாமல் இருந்து விடலாம். ஆனால், அடிப்படை வசதி, பாதுகாப்பு இல்லாமல் எப்படி இருப்பது?

பெண் பிள்ளைகள் கழிப்பறை கூட போக முடியவில்லை; போயிட்டு வருவதற்குள் என்ன ஆகுமென்று பதற்றமாக இருக்க வேண்டி உள்ளது.

Latest Tamil News
டீக்கடையில் நிம்மதியாக டீ குடிக்க முடியவில்லை; போதையை போட்டு விட்டு வந்து, வெட்டி விட்டு போய் விடுகின்றனர். இது நாடா; இல்லை காடா? இங்கு, அரசு என ஒன்று இருக்கிறதா, இல்லையா?

போலீசை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் சார், ஐந்து ஆண்டுகளில் அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியவில்லை என்றால், எதற்கு இந்த ஆட்சி, அதிகாரம்? ஸ்டாலின் சாருக்கும், தி.மு.க., அரசுக்கும் குடும்பத்தோடு கொள்ளை அடிப்பது தான் முக்கியம்.

டாஸ்மாக், நகராட்சி துறையில் மட்டும் தலா, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இது வெளியில் தெரிந்தது; தெரியாமல் இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

இளைஞர்கள் வேலை தேடி அலைகின்றனர். ஆனால், நகராட்சி துறையில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி, தகுதி இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்துள்ளனர்.

வண்டி வண்டியாக வைத்திருக்கும் பணத்தை ஓட்டுக்கு கொடுத்து, எப்படியாவது வெற்றி பெற நினைப்பர்.

எல்லாவற்றையும் வாங்கி கொண்டு, அவர்களின் செவியில் விசிலை ஊதி அனுப்புங்கள். நம்மை 'ஸ்மார்ட்' ஆக ஏமாற்றி கொள்ளை அடித்தனரே; அதேபோல் நாமும் ஸ்மார்ட்டா இந்த அரசுக்கு வேட்டு வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Latest Tamil News
@block_B@

பாபுவா, பிரபுவா?



கொளத்துார் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்யும்போது, அவரது வாகனத்துக்கு எதிரே, அந்த தொகுதியின் த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபு, ஒரு வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். ஆனால், அவர் பெயரை மறந்த விஜய், ''பிரபுவுக்கு ஓட்டு போடுங்கள்,'' என மாற்றி கூறி விட்டார்.block_B

@block_Y@

தேர்தல் கமிஷனில் போலீஸ் மீது புகார்



தேர்தல் கமிஷனுக்கு, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் அனுப்பியுள்ள கடிதம்: காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிக அளவில் சாலையில் கூடி, விஜய் பிரசார வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். இதனால், மொத்த பிரசாரத் திட்டமும் தாமதமாகிறது.


காவல் துறையின் மெத்தன நடவடிக்கையால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு, விஜய் பிரசாரம் பாதிப்படைகிறது. எனவே, இது குறித்து நேரடி விசாரணை மேற்கொண்டு, விஜய் பிரசாரத்துக்கு தேவையான பாதுகாப்பை வழங்க, சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


விஜயை காண பொது மக்கள் அதிகமாக கூடுவதை, 'விஜய்க்கு மக்கள் ஆதரவை பாருங்கள்' என வீடியோ எடுத்து, த.வெ.க., நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், போலீசார் அலட்சியத்தால் மக்கள் கூடுவதாக கூறி, அதை தடுக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு, த.வெ.க., புகார் அனுப்பி உள்ளது.block_Y

Advertisement