மதுரையை கோட்டைவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்; புலம்பி தவிக்கும் தோழர்கள்
ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், தனியாகவோ, கூட்டணியிலோ, மதுரை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் களமிறங்குவது வழக்கம். கடந்த 1952ல் முதல் தேர்தலில், கம்யூனிஸ்ட் தொழிற்சங்க தலைவரான ராமமூர்த்தி, சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வென்றார். சங்கரய்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் வெற்றி பெற்ற மதுரையில், அக்கட்சிக்கு இன்றும் அடிப்படை பலம் உள்ளது.
ஆனால், இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், மா.கம்யூ.,வுக்கு மதுரையில் தொகுதியே ஒதுக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் ஏழு இடங்களில், தி.மு.க.,வே நேரடியாக களம் இறங்குகிறது. மதுரை தெற்கு தொகுதி, ம.தி.மு.க.,வுக்கும் மேலுார் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகள், காங்.,கிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021ல், மா.கம்யூ., போட்டியிட்ட திருப்பரங்குன்றத்தில், தி.மு.க.,வே களமிறங்குகிறது.
இந்நிலையில், 60 ஆண்டுகளுக்கு பின், மதுரை மாவட்டத்தில், ஒரு தொகுதியில் கூட மா.கம்யூ., போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மார்க்சிஸ்ட் தோழர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
உண்டியல்குலுக்கிகளுக்கு கோடிகளே பிரதானமாகிபோச்சு
பாஜகவில் உள்ள கோஷ்டி பூசலை முடித்து வேட்பாளர் பட்டியல் வெளியிட இன்னும் முடியவில்லை.
மதுரை க்கு கம்யூனிஸ்ட் சீட்டு தராமல் இருந்ததற்கு வாழ்த்துக்கள். நான் இட்ட சாபம் பலித்தது குறித்து மகிழ்ச்சி. மதுரை மாநகரை கண்றாவியாக வைத்த அறிவுகெட்ட எம் பி வெங்கடேசனுக்கு நல்ல பாடம்
சீட் கிடைக்காவிட்டாலும் அடிமைகள் கூட்டம் வெளியேறாது. 10 15 கோடி பேசுது.
மார்க்சிஸ்ட் இப்போது எப்படி புலம்புகிறார்களோ? அதே போலத்தான் தொடர்ச்சியாக மார்க்சிஸ்டின் சு.வெங்கடேசனுக்கு மதுரையில் எம்.பி சீட் கொடுப்பதற்கு தி.மு.கவினர் தொடர்ந்து புலம்பிக் கொண்டு தான் உள்ளனர்.மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு