சைபர் கிரைம் மோசடி;2 வாலிபர்கள் கைது
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் கமிஷனுக்கு வங்கி கணக்குகளை பெற்று சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி 37. இவரது வங்கி கணக்கில் அதிக பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அப்போது எமனேஸ்வரம் கிஷோர் 25, அழகனுார் கேசவன் 27, ஆகியோரிடம் வங்கி கணக்கு விவரங்களை பாண்டி கமிஷனுக்கு கொடுத்தது தெரிந்தது.
கிஷோர், கேசவன் வங்கி கணக்குகளை கமிஷனுக்கு பெற்று சைபர் மோசடி கும்பலிடம் வழங்கி பணம் பெற்றதும் தெரிந்தது. இதையடுத்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
Advertisement
Advertisement