ஆந்திராவிலிருந்து கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: விரைவு ரயிலில், ஆந்திராவில் இருந்து கடத்திய 12 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

மாம்பலம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சார்கார் விரைவு ரயில், மாம்பலம் வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த நபர் மீது, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதித்த போது, 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு 6 லட்சம் ரூபாய்.

விசாரணையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஜஹபர் சாதிக் 44, எனவும், விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த, மேல் நடவடிக்கைக்காக, வியாசர்பாடியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement