மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து சரிவு


கரூர், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 103 கன அடியாக குறைந்துள்ளது.

கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 438 கன அடியாக வந்தது. குடிநீர் தேவைக்காக கதவணையில் இருந்து, 205 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 4.47 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement